Content feed Comments Feed


ப்‌ரியாமணிக்கு பேஸ் வாய்ஸ். நடுச்சாமத்தில் கேட்டால் யாருக்கும் நடுக்கம் வரும். கட்டை குரலையும் கலாபூர்வமாக மாற்ற முடியும் என்பதை பருத்திவீரனில் நிரூபித்தார் அமீர்.
பருத்திவீரனில் சொந்தக் குரலில் பேசினார் ப்‌ரியாமணி. அவருக்கு தேசிய விருது கிடைக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
சென்ற வருடத்துக்கான கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது ப்‌ரியாமணிக்கு கை நழுவிப் போனது. ஒரே காரணம், திரக்கதா படத்தில் அவர் சொந்தக் குரலில் பேசவில்லை. இதன் காரணமாக புதிய முடிவொன்றை ப்‌ரியாமணி எடுத்திருக்கிறார். விருதுக்கு ஸ்கோப் உள்ள படங்களில் கண்டிப்பாக சொந்தக் குரலில் பேசுவது என்பதுதான் அந்த முடிவு.

இந்தியில் நடிக்கும் பல நடிகைகளுக்கு ப்‌ரியாமணியை விட தடித்த குரல். உதாரணமாக ராணி முகர்‌ஜி. கட்டைக் குரல் என்பதற்காக வேறு யாரும் அவருக்குப் பதில் டப்பிங் பேசுவதில்லை. அவர் நடிக்கும் படங்களுககு அவரேதான் டப்பிங் பேசுவார். ப்‌ரியாமணி கேட்கும் கேள்வி, ராணி முகர்‌ஜிக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா?

இயக்குனர்களே, ப்‌ரியாமணியின் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?

0 comments

Post a Comment

About Us