Content feed Comments Feed

சிவகிரி

Posted by Admin 9/3/09

தமிழ்சினிமாவுக்கு ஒரு ‘வெயிட்டான’ புது வரவு இந்த படத்தின் ஹீரோ சிவகிரி. ஆர்வம் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற இவரது தன்னம்பிக்கைக்கு வேண்டுமானால் முதல் சல்யூட் போடலாம்! நடிப்பா? அடுத்த பாராவுக்கு போங்க சாரு...
கல்லூரிக்குள்ளேயே தீவிரவாதத்தை வளர்க்கிற ஒரு குரூப்பை கையும் களவுமாக பிடிக்கிறார் சிவகிரி. அதுவும் எப்படி? தானே மாணவராக அட்மிஷன் ஆகி! அட, நல்லாருக்கே என்று நிமிர வைக்கிற மாதிரி சில காட்சிகளும் உண்டு அந்த கல்லூரி கலாட்டாவில். ஈவ் டீசிங் செய்கிற மாணவர்களை கண்டு அஞ்சி நடுங்கும் அந்த மலை மலை ஹீரோ, அவர்கள் சொல்லுவதையெல்லாம் செய்கிற போது தியேட்டரில் சிரிப்பலை. அசமஞ்சம் என்று அவர்கள் நினைத்தால் அடுத்த சீனிலேயே அதிரடி என்ட்ரி கொடுத்து வில்லன்களை வெளுக்கிற போது, பின்னணியில் “சிவகிரி சிவகிரி” என்று ஆர் ஆர் இசைத்து மிரளடித்திருக்கலாம்!

பிறகுதான் பிரச்சனையே. நான்தாண்டா இந்த ஊரு ஏசி என்று வேடத்தை கலைக்கிறார் சிவகிரி. அதுவரைக்கும் இருந்த மீசையையும் ஷேவ் செய்துவிடுகிறாரா? அசல் அமுல்பேபி எபெஃக்ட்! காக்கி சட்டைக்குள் எரிமலையை எதிர்பார்த்தால், ஐஸ்கிரீமாக உலா வருகிறார் மனுஷன்.
அவ்வப்போது வெளிநாடுகளில் இவர் ஆடும் டூயட்டும், அவ்வளவு பெரிய உடம்போடு இவர் கொடுக்கிற மூவ்மென்ட்டும் ரசனை பெப்பர்மென்ட்!
கூட இருந்தே குழி பறித்தால் பரவாயில்லை. வெடிகுண்டு, தீவிரவாதம் என்று தமிழ்நாட்டையே மிரள வைக்கிறார் வில்லன் குகன். அவர் ஏன் இப்படி ஆனார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக். சிவகிரியின் காதல் மனைவி ருக்ஷனாவை இவரும் காதலிக்கிறார். எனக்கு கிடைக்காதவள் உனக்கும் கிடைக்கக் கூடாது என்று அவர் வில்லன் சிரிப்பு சிரிக்க, கடைசியில் சிவகிரியின் புல்லட்டில் தீவிரவாதி கம் நண்பன் அவுட்.

வெங்கல கடையில் யானை புகுந்த மாதிரி, சிவகிரியின் ஃபைட் சீன்கள் களை கட்டுகிறது. கொஞ்சம் மெனக்கட்டால் குணச்சித்திர வேடங்களில் கலக்கலாம். மூன்று கதாநாயகிகள். யாருமே நடிப்பை நம்பவில்லை என்பதை ஒவ்வொரு கோணத்திலும் உணர்த்துகிறார்கள். தலைமை ஆசிரியர் வெண்ணிறாடை மூர்த்தியும், ப்யூன் நெல்லை சிவாவும் சவசவ என்று பேசினாலும் லேசாக கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.

ஒளிப்பதிவாளரை விட, இசையமைப்பாளர் முந்துகிறார். கட்டிடம் கட்டுகிற ஆசையில் கல்லை அடுக்கியிருக்கிறார்கள். அஸ்திவாரத்தில்தான் ஆட்டம்!

பொம்மாயி

Posted by Admin

காதருகே வந்து படீர் என்று எதையோ போட்டு உடைக்கிற ரீரெக்கார்டிங், குளேஸ் அப்பில் பயம் அப்பிய கண்களோடு திரியும் கேரக்டர்கள், ஜாடாமுடி, பில்லி சூனிய பார்வையோடு அலைகிற மந்திரவாதிகள், எல்லாமாக கூடி ரசிகனின் மடியில் பயத்தை கொட்டுகிற படம்.
இந்தியில் வந்த பூங்க் என்ற படத்தின் தமிழாக்கமாம். டைரக்ஷன் ராம்கோபால் வர்மா என்பது கூடுதல் அதட்டல்!

தன்னுடன் பிசினஸ் பார்ட்னராக இருக்கும் அஸ்வினியை அவமானப்படுத்தி விரட்டியடிக்கிறார் தொழிலதிபர் சுதீப். பிரச்சனையை பில்லி சூனிய உதவியோடு எதிர்கொள்கிறார் அஸ்வினி. எப்படி? சுதீப்பின் பெண் குழந்தை ரக்ஷாவின் கால் மண்ணை எடுத்து பில்லி சூனியம் வைக்கிறார். பள்ளிக்கு போகிற பிஞ்சு, திடீரென்று ஆண் குரலில் சிரிக்க அதிர்ந்து போகிறது ஸ்கூல். இந்த காலத்திலே கூடவா பேய் பிசாசுன்னு பேசுவீங்க. இதுக்கு பேரு என்று புரியாத சில விஷயங்களை எடுத்துவிடுகிறார்கள் மருத்துவர்கள்.

நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வரும் குழந்தையை கண்டு துடியாக துடிக்கும் நாத்திக அப்பா முதன் முதலாக பில்லி சூனியத்தை நம்புகிறார். அதற்கான ஸ்பெஷலிஸ்டோடு வீட்டுக்கு வந்தால், அங்கேதான் ட்விஸ்ட். இன்னும் கொஞ்ச நேரத்திலே உங்க பொண்ணு இறந்திருவா என்கிறார் அவர். அதற்குள் ஆவியிடமிருந்து பிள்ளையை காப்பாற்ற வேண்டும். எப்படி? தேடி தேடி சூனியத்தை எடுக்கிறார். கடைசியில்...? நுனி சீட்டுக்கு ரசிகனை தள்ளிவிடுகிற க்ளைமாக்ஸ்.

எல்லா கேரக்டர்களுமே விதிர் விதிர்த்து போகிற அளவுக்கு நடிப்பை வழங்குகிறார்கள். குறிப்பாக குழந்தை ரக்ஷா. இவளையா அந்த பாழாப்போன பேய் வாட்டி எடுக்கணும்? என்று ரசிகர்களை பரிதாப்பட வைக்கிறாள் குழந்தை. திடீரென்று காணாமல் போவதும், ஒரு சீக்கு பிடித்த காக்காய் இவளை கண்ட்ரோல் பண்ணி வைத்திருப்பதும் பகீர். அம்மா, ரொம்ப வலிக்குதும்மா என்று குழந்தை அழும் போது மனசு வலிக்கிறது.

தனி அறையில் குழந்தையை படுக்க வைக்கும் மேற்கத்திய கலாச்சாரம் ஓகேதான். அதற்காக பிரச்சனைக்குள்ளான பிறகும் குழந்தையை தனி அறையில் படுக்க வைப்பதுதான் ஏறி மிதிக்கிற லாஜிக்.

வீட்டு வேலைக்காரியில் இருந்து, குழந்தையின் பாட்டி வரைக்கும் டெரர் எªஃக்ட் கொடுப்பதுதான் புஸ்வாண பில்டப்! இந்த பில்டப் சும்மா கிடக்கிற பொம்மைகளையும் விட்டு வைக்கவில்லை.

சவீதாசிங்கின் ஒளிப்பதிவு மிரட்டல். பின்னணி இசைதான் பேய் படங்களின் பலமே. அதை சரியாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் பப்பி.

பொம்மாயி... ஹையோடா!

ஈசா

Posted by Admin

உப்பள பின்னணியில் மனசை அப்பளம் போல் நொறுக்குகிற கதை. காதல் மனைவியின் இறப்புக்கு காரணமானவர்களை சக்கையாக பிழிந்து சாவு கொடுக்கிற வேலைதான் விக்னேஷ§க்கு!
வழக்கமான இந்த கதையை, சொல்லியிருக்கும் விதத்தில்தான் மிரட்டல்! புதுமுக இயக்குனர் பாலகணேசாவுக்கு ஒரு 'பலே' போடுங்கப்பா...

எடுத்தவுடனே ஸ்கீரினை ஓப்பன் பண்ணி, இருப்பதையெல்லாம் காட்டாமல், விக்னேஷின் குடிசைக்குள்ளே லக்ஷணா உயிரோடு இருப்பது போல துவங்குகிறது படம். கிடைக்கிற அண்ணாச்சிகளையெல்லாம் அண்ணாசி பழம்போல துண்டு போடுகிறார் விக்கி. இன்டர்வெல்லில்தான் தெரிகிறது, அதுவரை விக்னேஷ் பேசிக் கொண்டிருந்தது லக்ஷணாவுடன் அல்ல. அவரது பிணத்துடன் என்று! ஏன் இந்த கொலை வெறி துரத்தல்? காதலும், கவலையுமாக ஒரு பிளாஷ்பேக். தனது மனைவியின் சாவுக்கு காரணமானவர்களை போட்டுத்தள்ளும் விக்னேஷை துரத்துகிறது போலீஸ். கையில் சிக்கினாரா? விறுவிறுப்பான சுபம்.

இந்த படமே முதல், அல்லது கடைசி என்ற வெறியோடு உழைத்திருக்கிறார் விக்னேஷ். இப்படி ஒரு வெறித்தனமான ஹீரோ இல்லையென்றால், அந்த க்ளைமாக்ஸ் சண்டையை நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது இயக்குனர். பாம்புகள், தவளைகள் நடுவே ஒரு தவம் போலவே கிடந்து ஊர்ந்திருக்கிறார் விக்னேஷ். மனசு நிறைய பாராட்டலாம். பிதாமகன் விக்ரமை இமிடேட் செய்வதை தவிர்த்திருந்தால் விக்னேஷின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் கிடைத்திருக்கும். அதுதான் கொஞ்சம் உறுத்தல்.

லக்ஷணா, நிஜமாகவே லட்சணம். சற்றே அர்ச்சனாவின் சாயல். நடிப்பில் அவரையே மிஞ்சுவார் போலிருக்கிறது. தன்னை காதலிக்கும் விக்னேஷ் அதை வெளிப்படுத்த தடுமாறும்போது தானே முன் வந்து காதலை சொல்வது பேரழகு. இவருக்கும் விக்னேஷ¨க்குமான நெருக்கத்தில் நிழலை மிஞ்சிய நிஜம்.

கவனிக்கத்தக்க புதுமுகம் அந்த கருப்பு வில்லன். கடைசி வரை 'டவுசரு...' டயலாக்கை விடாமல் பற்றிக் கொள்வதுதான் சற்றே அலுப்பு. எல்லா ரீல்களிலும் அலட்டிக் கொள்ளாமல் நடந்து, கடைசி ரீலில் ஆக்ரோஷமாக மோதி செத்துப்போகையில் 'ஒழிஞ்சாண்டா துரோகி' என்று நெட்டி முறிக்கிறது தியேட்டர்.

காமெடிக்கென்று ஒரு லாரி ஆட்களை இறக்கியிருக்கிறார்கள். அதில் ஜம்மென்று முந்தி நிற்பது லொள்ளு மனோகரும், சுவர் முட்டி சுப்புராஜூம்தான்.

மிகவும் பிரமிக்க வைத்திருக்கிறார்கள் சண்டை இயக்குனர் ட்ரேகன் சிங்லீயும், ஒளிப்பதிவாளர் ஆர்.பி.பாலகணேஷ§ம். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் ஃபைட், ஆங்கில படங்களுக்கு இணையானது.

இசை- புதுமுகம் ஹரண். எல்லா பாடல்களும் இனிமை. குறிப்பாக யாரடி நீ மோகினி ரீமிக்ஸ் துள்ளல். பின்னணி இசையும் காட்சிகளை கவுரப்படுத்துகின்றன.

அவித்த உப்புமாவையே தாளிக்காமல், தனக்கென்று தனி அடையாளத்தோடு அறிமுகம் ஆகியிருக்கும் புதுமுக இயக்குனர் பாலகணேசாவுக்கு சின்ன சின்ன குறைகளை மறந்து தரலாம் ஒரு பூச்செண்டு.

ஈசா- நிச்சயம் லேசா இல்லை!

பொக்கிஷம்

Posted by Admin

தொடர்ந்து வறண்ட திரைப்படங்களாகப் பார்த்துச் சலித்துப்போய் பெரும் எதிர்ப்பார்ப்புகளோடு பொக்கிஷம் பார்க்கப் போனால்... ஒரு நல்ல சிறுகதையை ஜவ்வாக இழுத்து பார்வையாளர்களின் பொறுமையைச் சோதித்திருக்கிறார் சேரன்.
கதை மிக மிக சின்ன ஒரு முடிச்சுதான்.

உடல்நலம் சரியில்லாத தன் தந்தையை (விஜயகுமார்)அரசு மருத்துவமனையில் ஆபரேஷனுக்காக சேர்க்கிறார் லெனின் (சேரன்). அதே மருத்துவமனையில் தன் தாயைச் சேர்த்துவிட்டு இறுதி நேரத்தில் பணம் கட்ட முடியாமல் தவிக்கிறார் நாதிரா (பத்மப்ரியா). இலக்கியம் படிக்கும் கல்லூரி மாணவி. அந்த இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கிறார் லெனின். அடிப்படையில் கம்யூனிஸ்ட். தொழில், கொல்கத்தாவில் மெரைன் இஞ்ஜினியர். ஓரிரு நாட்களில் இருவருக்கும் ஏற்படும் பழக்கம், இலக்கியங்களை விவாதிக்கும் அளவு நட்பாகிறது.

பின்னர் கொல்கத்தா செல்லும் சேரன், தொடர்ந்து நாதிராவுக்கு கடிதம் அனுப்புகிறார். அவரும் பதிலுக்குக் கடிதம் அனுப்ப, நாளடைவில் அதுவே காதலாகிறது.

இந்தக் காதலுக்கு நாகூரைச் சேர்ந்த முஸ்லிம்களான நாதிரா குடும்பம் ஆரம்பத்தில் எதிர்ப்புக் காட்டுகிறது. ஆனால் மகனைக் கூட்டிக் கொண்டு நாகூருக்கே போய் சம்பந்தம் பேசுகிறார் விஜயகுமார். எதிர்பாராதவிதமாக, நாதிராவின் தந்தை இதற்கு ஒப்புக் கொள்கிறார்.

ஆனால் கொஞ்ச நாள் பொறுத்திருக்க வேண்டும் என்கிறார். தொடர்ந்து கடிதங்கள் எழுதக் கூடாது என்றும் மாதம் ஒன்று என எழுதிக் கொண்டால் போதும் என்றும் நிபந்தனை விதிக்க, சந்தோஷத்துடன் அதற்கு அதற்கு ஒப்புக் கொண்டு கொல்கத்தா செல்கிறார் லெனின்.

ஆனால் நாதிராவிடமிருந்து தொடர்ந்து கடிதங்கள் வருவது நின்று போக, மனமுடைந்த லெனின் நாகூருக்கே சென்று பார்க்கிறார். அங்கே நாதிரா குடும்பமே இல்லை. எங்கே போனார்கள் என்று சொல்லவும் ஆளில்லை. கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியாமல் நொந்து போகிறார்.

தந்தையின் வற்புறுத்தலால் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். ஒரு மகனுக்குத் தந்தையாகிறார். ஆனால் தன் பழைய காதலியின் தேடலைத் தொடர்கிறார். தனது ஏக்கங்கள், ஏமாற்றங்களை கடிதங்களாக எழுதி வைக்கிறார். ஆனால் கடைசிவரை நாதிராவைப் பார்க்க முடியாத பெருங்குறையுடன் மரித்துப் போகிறார்.

நாதிராவுக்கு என்ன ஆனது... லெனினின் கடிதங்கள் அவரைச் சென்று சேர்ந்தனவா... என்பது க்ளைமாக்ஸ்.

லெனின் பாத்திரத்தில் சேரன் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எழுபதுகளில் ஆரம்பமாகிறது கதை. இறந்துபோன சேரனின் டைரி மற்றும் கடிதங்களை அவர் மகன் படிக்க ஆரம்பிக்கும்போது, ப்ளாஷ்பேக் துவங்குகிறது.

காதல் நினைவுகள்... அதுவும் தோற்றுப் போன காதல் நினைவுகளை எத்தனை சுவாரஸ்மாகச் சொல்லியிருக்கலாம்... ம்ஹூம்... சேரனிடம் அந்த ஆட்டோகிராப் டச் இந்தப் படத்தில் நூறு சதவிகிதம் மிஸ்ஸிங்.

தகவல் தொடர்புக்கு வேறு வழியே இல்லாத கடிதப் போக்குவரத்துக் காலத்தில் கதை நடக்கிறது என்பதற்காக படம் முழுக்க இருவரும் மாறி மாறி கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பதையே காட்டுவது பெரும் சலிப்பை வரவழைக்கிறது.

தொழில்நுட்ப ரீதியில் சேரனின் மிகச் சிறந்த படம் இது என்றாலும், ஒரு காட்சியில் கூட, மனம் லயிக்க முடியாத அளவுக்கு படு வீக்கான திரைக்கதை.

எழுபதுகளில் இருந்த 'கல்கத்தா', ட்ராம் வண்டிகள், கார்கள், தபால் அலுவலகம், தந்தி அலுவலகம், மைக்கூடு, பேனா முனை, தபால் முத்திரை... இப்படிப் பார்த்துப் பார்த்து காட்சிகளுக்குத் தேவையான பின்னணியை கச்சிதமாக வடித்த சேரனால் அழுத்தமான காட்சிகளை அமைக்க முடியாமல் போயிருக்கிறது.

தோற்றுப் போன காதல்களே காவியங்களாகின்றன... ஆனால் இந்த காதலில் அழுத்தமான, சுவாரஸ்யமான சம்பவங்களே இல்லை என்பதை எந்தக் கட்டத்திலும் இயக்குநர் சேரன் உணராமல் போனதை என்னவென்பது!.

ஒரு நடிகராகவும் இந்தப் படத்தில் சேரனை ரசிக்க முடியவில்லை. மேனரிசம், அழும் பாங்கு, வசன உச்சரிப்பு... எல்லாவற்றிலுமே சேரன் புதிதாய் பிறந்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

பத்மப்ரியாவை அழகாகக் காட்ட ரொம்பத்தான் மெனக்கெட்டிருக்கிறார்கள். அந்த அக்கறையை கொஞ்சம் திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம்.

இளவரசு, விஜயகுமார், ஜெய்ப்பிரகாஷ் ஆகியோர் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

வேறு பாத்திரங்களே இந்தக் கதையில் இல்லை.

டைட்டானிக், அவள் அப்படித்தான் இசையை மறுபடியும் வாசித்துக் காட்டியிருக்கிறார்கள் சபேஷ் முரளி. பாடல்களில் இரண்டு பரவாயில்லை ரகம்.

ராஜேஷ்யாதவின் காமிராவும், வைரபாலனின் கலை இயக்கமும் முதல் தரம்.

தான் தரும் எல்லாமே நல்ல படைப்புகள்தான்... அதை மக்களுக்கு ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற பிடிவாதத்தை இயக்குநர் சேரன் தவிர்க்க வேண்டும். பாத்திரங்களின் இயல்பைத் திரித்து, தனக்கேற்ப அதைச் சிதைக்கும் நடிகர் சேரன் மாறியாக வேண்டும்.

காரணம், சேரன் என்ற கலைஞனுக்குள் இன்னும் பொக்கிஷமாக புதைந்து கிடக்கும் கலைப் படைப்புகள் இந்த தமிழ் சினிமாவுக்கு நிறைய தேவைப்படுகிறது!.

Unmaiyana Nadpu.........!!

Posted by Admin 9/2/09

முகம்

கடைசியாக வெளியான வில்லு, குருவி இரண்டும் சுமார் படங்கள். 49 வது படமான வேட்டைக்காரனை எப்படியாவது ஓட்டியாக வேண்டும்.
விஜய் அடிக்கும் அரசியல் ஸ்டண்ட் கூட வேட்டைக்காரனை ஓட வைக்க‌த்தான் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கும் அளவுக்கு வேட்டைக்காரன் வெற்றி அவருக்கு தேவைப்படுகிறது. கும்பிட போன தெய்வம் பைபாஸில் குறுக்கே வந்த மாதி‌‌‌‌ரி வேட்டைக்காரன் வெற்றிக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது. படத்தின் தயா‌‌‌‌ரிப்பாளர் சன் பிக்சர்சுக்கு படத்தை விற்றிருக்கிறார்.

சுமார் படங்களையே அபி‌‌‌‌ரிதமான விளம்பரத்தால் சூப்பர் ஹிட்டாக்கி பலரது வயிற்றில் அமிலத்தை அள்ளி தெ‌ளித்து வருகிறது சன் பிக்சர்ஸ். இவர்கள் வாங்கிய அயன் கண்டபடி ஓடி கலெக்ஷனில் சாதனைப் படைத்தது தெ‌ரியும். இப்போது வேட்டைக்காரனையும் இவர்களே வாங்கியிருக்கிறார்கள். எப்படி விளம்பரம் செய்வார்கள் என கற்பனை செய்வதே கடினம்.

சன் வேட்டைக்காரனை வாங்கியதால் படம் எப்படியும் ஓடிவிடும் என்ற தெம்பு விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மாந்திரீகமும், சூனியமும் மூடநம்பிக்கை, அது நமக்கு நடக்காத ‌வரை... எனும் பயமுறுத்தும் உண்மையையும், தன் வினை தன்னை சுடும் எனும் பழகிய பழமொழியையும் சொல்லி வந்திருக்கும் மந்திர - தந்திர, மாயா ஜால திகில் படம்தான் பொம்மாயி.

பிரபல பில்டிங் கான்டிராக்டர் ராஜீவ்வாக ஹீரோ சுதிப். அவரது மனைவி ஆர்த்தியாக புதுமுகம் அம்ரிதா. இவர்களது ஆசை பெண் குழந்தை ரக்ஷா. இவர்களது கட்டுமான கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு தம்பதி பெரிய அளவில் ராஜீவ்வுக்கு து‌ரோகம் செய்துவிட, அவர்களை அசிங்கப்படுத்தி வேலையை விட்டு தூக்குகிறார் ஹீரோ. பலர் முன்னிலையில் அவமானப்பட்ட ஜோடி., ஹீரோவின் ஆசை மகளுக்கு பில்லி சூனியம் வைக்கிறார்கள். அதனால் அவரது ஆசைமகள் ரக்ஷாவிற்கு உயிர் போகும் ஆபத்தான நிலை. கடவுளை நம்ப மறுக்கும் ஹீரோ, மாந்திரீகத்தையும் நம்ப மறுத்து மருத்துவத்தை நம்புகிறார். மருத்துவமும் கைவிட, ஹீரோ கடவுளை நம்பினாரா? மகளை காப்பாற்றினாரா? நயவஞ்சக ஜோடியை நசுக்கினாரா, இல்லையா? என்பதற்கு முரட்டு தொனியில் விடை சொல்கிறது மீதி கதை!

காண்ட்ராக்டர் ராஜீவ்வாக தமிழுக்கு புதுமுக நாயகர் சுதீப் பாசமான தம்பியாக பளிச்சிடுகிறார். அம்மாவாக அம்ரிதாவும் குழந்தை பாசத்தால் நம்மையும் கலங்க வைக்கின்றார். ஆவி பிடித்த பெண்ணாகவும், பிடிக்காத பெண்ணாகவும் குழந்தை ரக்ஷாவின் நடிப்பும் திகில் மிரட்டல். பெண் மதன்பாபோ? என கேட்குமளவிற்கு சிரித்தபடியே வந்து ஹீரோவின் குடும்பத்தை சிதறடிக்கப் பார்க்கும் வில்லியும், அவரது கணவர் முட்டைமுழி, மொட்டைத்தலையரும் வித்தியாச விஸ்வரூபம். வேலைக்காரி, கார் டிரைவர் உள்ளிட்ட சஸ்பென்ஸ் பாத்திரங்களுக்காகவே இயக்குனர் ராம் கோபால் வர்மாவிற்கு சபாஷ் சொல்லலாம்.

சாதாரண சுவரைக்கூட திக், திக் திகிலாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனருக்கு, சவீதா சிங்கின் ஒளிப்பதிவும், அமர்மோஹ்லியின் இசையும், பப்பி துத்துலின் பின்னணி இசையும், சரிவிகிதத்தில் கைகொடுத்து சபாஷ் சொல்ல வைக்கின்றன. நம்ப முடியாத கதையை, தனது திரைக்கதை, இயக்கத்தின் மூலம் நம்ப வைத்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.

பொம்மாயி - மாயாஜால மந்திரக்காரி!

ஐந்து ஆண்டுகளுக்கு முன் மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசரை அறிமுகப்படுத்திய பின் பல்வேறு சாதனைக் கற்களைக் கடந்துள்ளது. விரைவில் இன்னும் ஒரு சாதனை மகுடத்தினை அடைய உள்ளது. தன் இன்டர்நெட் பிரவுசர் பயர்பாக்ஸ் தொகுப்பினை டவுண்லோட் செய்தவர்களின் எண்ணிக்கை இருநூறு கோடியைத் தாண்ட உள்ளது. இதனைக் கண்காணித்து அறிவிக்க இணைய தளம் ஒன்றினை மொஸில்லா திறக்க இருக்கிறது. இதன் முகவரி Onebillionplusyou.com என்று அமையும்.


இதற்கிடையே ட்விட்டர் தளத்தில் பயர்பாக்ஸ் டவுண்லோட் செய்வதனை ஒவ்வொரு விநாடியும் கணக்கெடுத்து எத்தனை டவுண்லோட் ஏற்கனவே மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்று காட்டும் வகையில் ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஒவ்வொரு விநாடியும் சராசரியாக 20 பேர் வரை டவுண்லோட் செய்வார்கள் என மொஸில்லா எதிர்பார்க்கிறது. இதை எழுதும் நாளில் இருந்து இரண்டொரு நாளில் இந்த 200 கோடி எண்ணிக்கை எட்டப்படும் எனத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை பயர்பாக்ஸ்பிரவுசரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அல்ல என்றாலும், இந்த பிரவுசர் மீது நம்பிக்கை கொண்டு அதனைச் சோதித்துப் பார்க்க விரும்புவர்களின் விருப்பத்தினைத் தெரிவிப்பதாக அமைகிறது.
18 மாதங்களுக்கு முன் தான் (பிப்ரவரி 22, 2008) பயர்பாக்ஸ் டவுண்லோட் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் குறுகிய காலத்தில் 150 கோடிப் பேர் டவுண்லோட் செய்கிறார்கள் என்பது இந்த பிரவுசரின் தனித்தன்மைக்கு ஒரு பாராட்டு ஒப்புதல் என்று தான் கொள்ள வேண்டும்.
இந்த செய்தியினை எழுதுகையில் கிடைத்த எண்ணிக்கை தகவல் இதோ தரப்படுகிறது. தளத்தின்முகவரி, நாள், நேரம், டவுண்லோட் எண்ணிக்கை இங்கு காட்டப்படுகிறது.


http://twitter.com/FirefoxCounter 1,024,106,599 downloads at 10.9 per second on 20090823 07:24 UTC

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பல்வேறு தொழில் நுட்ப சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. நாம் அடிக்கடி கேட்கும் சில சொற்களுக்கான அடிப்படை விளக்கம் இங்கு தரப்படுகிறது. யு.எஸ்.பி. (Universal Serial Bus) சீரியல் பஸ்: கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை விரைவாகவும் எளிதாகவும் பொருத்த இது வழி வகுக்கிறது. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும் போதே இதன் மூலம் துணை சாதனங்களை இணைக்கலாம். கீ போர்டு, மவுஸ், கூடுதல் மெமரி சாதனம் போன்றவை இதில் அடங்கும்.

பி.ஓ.பி.3 – போஸ்ட் ஆபீஸ் புரோடோகால் – (Post Office Protocol) இணைய இணைப்பில் இமெயில்களை நம் கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பவும், நமக்கு வந்துள்ள இமெயில்களை கம்ப்யூட்டருக்கே பெற்று கையாளவும் அமைக்கப்பட்ட ஒரு வழிமுறை.

ட்ராக் அண்ட் ட்ராப் (Drag and Drop) – கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் ஒரு வசதி. இதன் மூலம் திரையில் உள்ள ஒரு பொருள் அல்லது பைலை இழுத்துச் சென்று இன்னொரு இடத்தில் அமைத்துவிடலாம்.


ஹார்ட் டிஸ்க் – (Hard Disk) அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இணைக்கப் பட்டுள்ள அதிகக் கொள்ளவுத் திறன் கொண்ட டிஸ்க் டிரைவ். இதில் தான் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பைல்கள் ஆகியவை பதியப்பட்டுப் பத்திரமாக வைக்கப்படுகின்றன. தேவைப்படும் போது இவற்றிலிருந்து பைல்களை எடுத்து ராம் மெமரியில் வைத்து எடிட் செய்திடலாம்.


நெட்வொர்க்: (Network) பல கம்ப்யூட்டர் களையும் பிரிண்டர்களையும் இணைந்த அமைப்பிற்கு நெட்வொர்க் என்று பெயர். இதனால் கம்ப்யூட்டரில் உள்ள தகவல் களையும் இணைக்கப்பட்டுள்ள பிரிண்டர் களையும் அனைத்து கம்ப்யூட் டர்களை இயக்குபவர் களும் பகிர்ந்து கொள்ளலாம்.

பி.எம்.பி. – பிட்மேப் (B.M.P. Bit Map என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டரில் ஒரு கிராபிக் இமேஜ் / படமானது பிட்மேப்களால் அமைக்கப்படுகிறது. இந்த பிட் மேப் என்பது பிக்ஸெல் அன அழைக்கப்படும் சிறிய புள்ளி களால் ஆனது. ஸ்கேன் செய்யப்பட்ட புகைப் படங்கள் மற்றும் படங்கள் இப்படித்தான் அமைகின்றன. படங்களை எடிட் செய்திடும் சாப்ட்வேர் மூலமாக ஒரு படத்தை மிகப் பெரிதாக ஸூம் செய்து பார்த்தால் இந்த புள்ளிகள் நன்றாகத் தெரிய வரும். பிட்மேப் வழி அமைந்த பட பைல்கள் பெரிய அளவில் அமையும் என்பதால் பிற வகை பட பார்மட்டுகளைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

பி.டி.எப். போர்ட்டபிள் டாகுமெண்ட் பார்மட் (Portable Document Format): அடோப் நிறுவனம் வடிவமைத்த ஒரு வகை பைல் வடிவம். கிராபிக்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அடங்கிய பக்கங்களை அதனை உருவாக்கிய சாப்ட்வேர் தொகுப்பின்றிப் பார்ப்பதற்கு உதவி செய்வதே பி.டி.எப். பார்மட் ஆகும். அடோப் அக்ரோபட் மூலம் உருவாக்கப் பட்ட இந்த பி.டி.எப். பைல்களை இலவசமாகக் கிடைக்கும் அக்ரோபட் ரீடர் என்னும் தொகுப்பின் மூலமே பார்க்க படிக்க முடியும்.

பேண்ட்வித் (Bandwidth): இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.


பயர்வால் (Firewall): நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப் பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சி யைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.


இன்டர்நெட் டெலிபோனி (Internet Telephony): வழக்கமான டெலிபோன் இணைப் பில்லாமல் இன்டர்நெட் மூலம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்.


பீர் டு பீர் (Peer to Peer): கம்ப்யூட்டர்களை ஒன்றுக்கொன்று நேரடியாக எந்த சர்வரின் துணையின்றி இணைக்கும் முறைக்கான பெயர்.
போர்ட் (Port): ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கெனத் தனியாக ஒதுக்கப்பட்டு டேட்டா பரிமாறுவதற்கென உள்ள வழி.


குரோம் தரும் தீம் செட்டிங்ஸ்
கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசருக்குப் பல புதிய தீம் காட்சிகளை வெளியிட்டுள்ளது. சாதாரண அடிப்படையில் அமைந்த காட்சிகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட சில காட்சிகள் வரை இதில் கிடைக்கின்றன. மொத்தம் 29 டெம்ப்ளேட்டுகள் தரப்பட்டுள் ளன. இவை அண்மையில் வெளியான குரோம் பிரவுசர் பதிப்பு 3ல் பயன்படுத்த முடியும்.
இவற்றைப் பயன்படுத்த குரோம் பிரவுசர் சென்று, பின் இதன் காலரிக்குச் செல்ல வேண்டும். இதன் முகவரி: https://tools.google. com/chrome/intl/en/themes/index.html இங்கு தீம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, கீழாக உள்ள டவுண்லோட் மேனேஜர் பேன் மூலமாக டவுண்லோட் செய்திடலாம். டவுண்லோட் செய்து முடித்தவுடன் “ணிணீஞுண” என்பதில் கிளிக் செய்திட வேண்டும். உடன் தேர்ந்தெடுத்த தீம் கொண்டு குரோம் பிரவுசர் காட்சியளிக்கும். இதில் என்ன விசேஷம் என்றால், வழக்கமான மாற்றாத டிபால்ட் தோற்றத் தினை உடனடியாக பெர்சனல் ஸ்டப் என்றுள்ள லிங்க்கில் கிளிக் செய்து பெறலாம். இவ்வாறு தேர்ந்தெ டுத்த தீம் மற்றும் டிபால்ட் தோற்றம் என மாற்றிக் கொள்வது எளிதாகும். ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தீம் அமைப்பது குரோம் செயல்பாட்டின் வேகத்தைச் சற்று குறைக்கலாம். இன்னொரு விஷயத்தையும் கூற வேண்டும். பயர்பாக்ஸ் தரும் தீம் காலரியுடன் ஒப்பிடுகையில் இது மிகச் சாதாரணம். அதன் வகைகள் அதிகமானவை; அற்புதமானவை.


நெட்ஸ்கேப் நிறுவனரின் புதிய பிரவுசர்
இன்டர்நெட் உலா வர உதவிடும் பிரவுசர்களில் முதலில் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வந்த பிரவுசர் நெட்ஸ்கேப் கம்யூனிகேடர் என்னும் இன்டர்நெட் பிரவுசராகும். ஆனால் 1990 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் நெட்ஸ்கேப் இருந்த இடத்தை எடுத்துக் கொண்டது. அதன்பின் வந்த பிரவுசர்களினால் நெட்ஸ்கேப் பிரவுசர் சந்தையை விட்டே ஏறத்தாழ காணமல் போன அளவிற்கு மறைந்தது.
நெட்ஸ்கேப் நிறுவனத்தை உண்டாக்கிய மார்க் ஆண்ட்ரிசன் தற்போது புதிய பிரவுசர் ஒன்றை உருவாக்கும் முயற்சியில், புதிய நிறுவனமான ராக்மெல்ட் (RockMelt) என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்து செயல்பட்டு வருகிறார். மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பை எதிர்த்து பயர்பாக்ஸ் பெற்று வரும் வெற்றியே புதிய முயற்சிக்குக் காரணம் என்று இந்த துறையில் இருப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராக்மெல்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய பிரவுசர் முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் புதியதொரு அனுபவத்தினை அளிக்கும் என்று ஆண்ட்ரீசன் குறிப்பிட்டுள்ளார். இன்டர்நெட் தளங்கள் வேகமாக வளர்ந்த அளவிற்கு அவற்றிற்கான பிரவுசர் வளர்ந்து, மக்களுக்கு உதவவில்லை என்றும், புதியதாக உருவாகும் பிரவுசர் இந்த குறையினைத் தீர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

lankasri.comபொதுவாக பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.

அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும். திரவ உணவு மாறி, இட்லி, பருப்பு சாதம், பிஸ்கட் போன்ற திட உணவுப் பொருட்களை குழந்தைகள் சாப்பிடத் தொடங்குகின்றன.

ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளானால், மதியம் பள்ளிக்கூடம் இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். மேலும் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும்.

5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குறைந்தது 9 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியமாகிறது.

வளர்ந்து பெரியவர்களாகி விட்டாலோ, 7 முதல் 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.

35 வயதைக் கடந்தவர்கள் 6 மணி நேரமாவது ஆழ்ந்த நித்திரை கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலமும், மன நிலையும் சரிவர செயல்பட்டு. உரிய பணிகளை செவ்வனே செய்ய முடியும்.

மன நலத்துடன் தொடர்புடையது தூக்கம் என்றால் அது மிகவும் சரி.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் அளிக்கப்படும் மருந்து, தூக்கத்திற்கானதே.

போதிய அளவு தூக்கம் இல்லாததே பல நேரங்களில் மனோரீதியாகப் பாதிப்புக்குள்ளாக காரணமாகி விடும்.

மனோநிலை பாதிக்கப்பட்டவர்கள் சில நேரங்களில் புலம்ப நேரிடும். அப்படிப் புலம்புவர்களுக்கு தூக்கமே மிகச் சிறந்த மாற்று மருந்தாகும். எனவே தூக்கத்திற்கான மருந்துகளை, மனோதத்துவ நிபுணர்கள் அளிப்பர்.

அதன் பின்னரே அவர்களுக்கு கவுன்சலிங் எனப்படும் கலந்தாய்வை மேற்கொள்வர்.

எனவே 2, 3 மணி நேர தூக்கம் போதும் என்று எண்ணாதீர்கள். தவிர, சிலருக்கு இரவு வெகுநேரம் டி.வி. பார்க்கும் வழக்கம் இருக்கும். அதுபோன்றவர்கள் காலையில் அதிக நேரம் தூங்குவார்கள்.

பின்னர் அவசரமாக எழுந்து, அலுவலகத்திற்குத் தாமதமாகச் செல்வதையும் பார்க்கிறோம்.

முதலில் இரவில் வெகுநேரம் கண் விழிப்பதால், அவர்களின் உடல் சூடு அதிகரித்து பல்வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.

காலையில் தாமதமாக எழுந்திருப்பதால், சரிவர உணவருந்த முடியாமல் போகலாம். அதுவே அசிடிட்டி போன்ற உடல் பாதிப்புகளை ஏற்படுத்த காரணமாக அமைந்து விடுகிறது.

வேலைக்கு அவசரமாகவும், ஒரு டென்ஷனோடும் புறப்பட்டுச் செல்வதால், அன்றைய தினம் மேற்கொள்ள வேண்டிய சில பணிகளை மறந்து விட நேரிடுகிறது. அலுவலகத்திற்குச் சென்றாலும் டென்ஷனே நீடிக்கும். இதனால் உடல் பாதிப்படைகிறது.

எனவே தூக்கமின்மையானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதோடு மனோநிலை பாதிப்படைய முக்கியக் காரணமாகிறது.

இரவில் போதிய அளவு தூங்குங்கள்! உடல் ஆரோக்கியமாக இருங்கள் !!

lankasri.comபன்றிக் காய்ச்சல் நோயை பரப்பும் எச்1என்1 வைரஸை ஆயுர்வேத மருந்துகளான அபராஜிதா தூபா, நல்லெண்ணெய் (எள் எண்ணெய்) மற்று௦ம் தூமபானா ஆகியவற்றை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நோய்க்கு இந்தியாவில் இதுவரை 103 பேர் பலியாகியுள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் 3 ஆயிரத்தை தொடவுள்ளது.

தொற்று நோயான பன்றிக் காய்ச்சலை பரப்பும் எச்1என்1 வைரஸ், காற்று மூலம் வேகமாக பரவுகிறது. இதனாலேயே இந்நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தான் தற்போது பொதுமக்கள் எங்கு சென்றாலும் முகக் கவசம் அணிந்தே வெளியே செல்வதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில், பன்றிக் காய்ச்சல் நோயை ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, பாரம்பரிய ஆயுதவேத மருந்தான 'அபாராஜிதா தூபா' பன்றிக் காய்ச்சலை பரப்பும் எச்1என்1 வைரஸை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எட்டு வகை மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் 'அபாராஜிதா தூபா'வை நெருப்பு கனல்களில் இட்டு, அதன் புகையை வீடு, அலுவலகம் மற்றும் பள்ளி அறைகள் போன்ற நமது சுற்றுப்புற பகுதிகளில் பரவும்படி செய்ய வேண்டும். நாளொன்றுக்கு இருமுறை இப்படி புகை மூட்டம் செய்வதன் மூலம், எச்1என்1 வைரஸ் கிருமிகள் மற்றும் அம்மை நோய் கிருமிகள் போன்றவை அந்த பகுதிக்குள் நிழையாதவாறு தடுக்க முடியும் என்று உலக ஆயுர்வேத காங்கிரஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு செயலரான மருத்துவர் கீதா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, நல்லெணெய்யும் (எள் எண்ணெய்) எச்1என்1 வைரஸை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. எள் எண்ணெயை நமது மூக்கு துவாரத்தில் தடவினால், நாம் சுவாசிக்கும் போது மூக்கு வழியாக எச்1என்1 வைரஸ் கிருமிகள் நமது உடலுக்குள் செல்வதை இந்த எண்ணெய் தடுத்து விடுகிறது.

ஒருமுறை நமது மூக்குத் துவாரத்தில் எண்ணெய் தடவினால், குறைந்தது 4 மணி நேரமாவது பன்றிக் காய்ச்சலை பரப்பும் வைரஸ் கிருமிகள் நம்மை அண்டாது என்றும் மருத்துவர் கீதா விளக்கியுள்ளார்.

இதேபோன்று தூமபானா மருந்துப்பொருளும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுர்வேத மருத்துவ முறையில் பன்றிக் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்து குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடந்தது. 'ஆயுஸ்' துறையின் இணை செயலரோ பான்டா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான ம்ருத்துவ நிபுணர்கள் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில், பன்றிக் காய்ச்சல் நோயின் 2வது கட்டத் தாக்குதலில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. எனவே, அதற்கு முன்னதாக அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தேசிய அளவில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த பணியில் அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

lankasri.comகம்ப்யூட்டரில் வைரசை பரவச்செய்யும் 100 வெப்சைட்டுகளின் பட்டியலை, ஆஸ்திரேலிய நிறுவனம் வெளியிட்டுள்ளது.கம்ப்யூட்டரில் இன்டர்நெட்டின் பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதில், “மால்வேர்’ என்ற சாப்ட்வேர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிலர் ஆபாசக் காட்சிகளை சில வெப்சைட்டுகளில் காட்டுகின்றனர்.

இந்த வெப்சைட்டைப் பயன்படுத்தினால், கம்ப்யூட்டரில் வைரஸ் பரவி பல ஆயிரம், பயனுள்ள வெப்சைட்டுகளை பாதிப்படையச் செய்யும் அபாயம் உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் “மால்வேர்’ சாப்ட்வேர் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வெப்சைட்டுகள் பாதிப்படைந்துள்ளதாக ஆஸ்திரேலிய கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு நிறுவனமான “நார்டன் சிமென்டெக்’ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நார்டன் சிமென்டெக் நிறுவன அதிகாரி நடாலி கானர் குறிப்பிடுகையில், ” மால்வேர் சாப்ட் வேர், சில விளையாட்டு வெப்சைட்டுகள் மூலமும் வைரசை பரவச் செய்கிறது. இந்த வைரஸ் பரவுவதால் சிலருடைய தனிப்பட்ட அந்தரங்க தகவல்கள் மற்றவரின் கையில் எளிதாகக் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்துக்குரிய 100 வெப்சைட்டுகளின் பெயர்களை வெளியிட்டுள்ளோம். இந்த வெப்சைட்டுகளைப் பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் வைரஸ் பரவுதல் உள்ளிட்ட பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்’ என்றார்.

lankasri.comசெல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம் நெட்புக் தயாரிப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளது.

கம்ப்யூட்டரும் செல்போனும் உள்ளடக்கிய நெட்புக் சாதனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி கூறியிருந்தார்.இதன் பெயர் புக்லெட் 3G(Booklet 3G) இது விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும். Intel Atom Z530 processor,12 மணி நேர பேட்டரி லைப்,HD Display(1366 x 768 pixels),10.1-inch display with HDMI Port போன்ற சிறப்பம்சங்களுடன் இதன் எடை 1.25 Kg மட்டுமே.நோக்கியா இதனை நெட் புக் என்று ஒத்துக்கொள்ளவில்லை ஏன் என்றால் இதில் 3Gயும் உண்டு.

Wi-fi,Bluetooth,Webcam,SD Card Reader,GPS Chip,Pre installed Ovi Maps என்று கிட்டத்தட்ட எல்லா வசதிகளும் இதில் உண்டு.

புக் லெட் 3G மற்ற நெட்புக்களுக்கு எல்லாம் கடும் சவாலாக விளங்கும்.

lankasri.comபேஸ்புக், ட்விட்டர், மைஸ்பேஸ், பெபூ, ப்ரண்ட்ஸ்டர் மற்றும் ஹாய் 5 போன்ற சமுதாய இணைய தள நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்! அப்படியானால் அண்மைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் கூப் பேஸ் (Koobface) வைரஸ் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்.

இந்த தளங்களின் பேரில் உங்களைத் தூண்டும் மெசேஜ் ஒன்று உங்களுக்கு இமெயில் வழியாக அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்ட வீடியோ ஒன்றை டவுண்லோட் செய்து பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளும் தூண்டில் செய்தி ஒன்று கிடைக்கும். வீடியோவிற்கான லிங்க்கைக் கிளிக் செய்தால் யு–ட்யூப் போல தளம் ஒன்று திறக்கப்படும். அங்கே ஒரு வீடியோ காட்சி ஒன்று உள்ளதென்றும், அதனைக் காண சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை இறக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதற்கான லிங்க் கொடுக்கப்படும்.

இதற்கு யெஸ் என அழுத்தினால், உங்கள் கம்ப்யூட்டரில் உங்களுடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் புரோகிராம் ஒன்று இறங்கி அமர்ந்து கொள்ளும். பின் உங்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட், வங்கி சார்ந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு அனுப்பப்படும்.

ஏற்கனவே இந்த வைரஸ் புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரில் மேலே சொன்ன நடவடிக்கை களினால் இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் உடனே இந்த கூப் பேஸ் வைரஸ் குறித்த அனைத்து வரிகளையும் ரெஜிஸ்ட்ரியிலிருந்து நீக்கவும். உங்கள் ஆண்ட்டி வைரஸை அப்டேட் செய்து கம்ப்யூட்டரை முழுமையாகச் சோதனை செய்திடவும்.

lankasri.comசந்திரனின் மேற்பரப்பை முப்பரிமானப் படம் பிடிக்கவும் ஆராயவும் என்று இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால், கிட்டத்தட்ட 4 பில்லியன் இந்திய ரூபாய்கள் செலவில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான் - 1 விண்கலம் அதன் அனைத்துத் தொடர்புகளையும் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இழந்ததை அடுத்து அதன் ஆயுள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு அக்டோபர் திங்களில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் இரண்டு ஆண்டுகள் ஆய்வுப் பணி தீர்மானிக்கப்பட்டு இக்கலம் சந்திரன் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் அதன் ஆயுள் ஓராண்டுக்குள்ளாகவே முடிவுக்கு வந்து விட்டது.

சந்திரயான் - 1 திட்டம் பகுதியாக என்றாலும் வெற்றி பெற்றுள்ளதாகவும் பல பெறுமதி மிக்க தரவுகளை அது சந்திரனில் இருந்து பெற்றுத் தந்திருப்பதாகவும் இத்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் கூறியுள்ள போதும்.. பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து (மற்றைய நாடுகளின் சந்திரனுக்கான விண்கலங்களின் பெறுமதியோடு ஒப்பிடும் போது இதன் செலவுத் தொகை குறைவாகும்.) இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதும் பூரண பலனைப் பெற முடியவில்லை என்றே பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள், வெப்பநிலை உயர்வு மற்றும் முக்கிய உணரி சம்பந்தபட்ட பிரச்சனைகள் என்று கடந்த காலங்களிலும் அதன் தொழிற்பாடு சீரற்றே இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த விண்கலத்தில் இந்தியத் தயாரிப்பு பாகங்கள் 5ம் அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஜேர்மனியத் தயாரிப்பு பாகங்கள் 6ம் உள்ளடக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Us