எல்லைகள் ரெண்டிலயும் விரட்டியடிக்க
நட்ட நடுக்கடலில்
"வணங்காமண்" அகதியாய்.
பிரபாகரனுக்கா அனுப்பினம்.
ஆயுதங்களா அனுப்பினம்.
அகதித் தமிழனுக்குத்தானே அனுப்பினம்.
பிச்சைப் பாத்திரத்தோட
பச்சைத்தண்ணியோட பிஸ்கட்டும் தின்னும்
பச்சைத்தமிழன்ர
மிச்ச உயிரைக் கொஞ்சம் பிடிக்க எண்டுதானே
மினக்கெட்டுச் சேர்த்து அனுப்பினம்.
'ராஜபக்ச' ஆராயிராராம்
'கோத்தபாய' கொக்கரிக்க
'பசில்' படுத்துக்கிடக்க
"வணங்காமண்"
அங்கயும் இங்கயுமா அல்லாடினபடி.
தொப்புளின்ர கொடி எண்ட தாய்த் தேசமோ
தப்புத் தப்பா
நாளுக்கு ஒண்டாய் நடிச்சுக்கொண்டு.
கலைக்குப் பேர் போன நாடெல்லோ.
நல்லாய்த்தான் நடிக்கினம்.
ரஜனியும் கமலும் எந்த மூலைக்கு அப்பா...டி!
பிச்சை எடுக்கவும் மனுசரில்ல.
பிச்சை போடவும் தேவையில்ல.
அன்றாடம் காய்ச்சிகள்தான் நாங்கள்.
ஆனா அடுத்தவீட்டுக்கு
உப்புத் தா கொஞ்சம் புளி தா எண்டு போனதில்ல.
வேலிக்குள்ள சின்னக் குடில்.
குசினியும் கக்கூசும் குளிக்கக் கிணறுமாய் இருந்தம்.
தண்ணியைத் தெய்வமாக் கும்பிட்ட நாங்கள்
எங்கட மண்ணிலேயே
தண்ணிக்குக்கூடத் தவம் கிடக்கிறம்.
தர்மம் தலை காக்கும் எண்டிச்சினம் ஆரோ.
தர்மமும் தானமும் தலையும் எங்க போச்சுது.
பெட்டைப் பிள்ளைகளை முந்தானைக்குள்ள மூடி மூடி
அடைக்கோழியாய் காத்த பரம்பரை.
பெடிச்சிக்கு வெயில் பட்டாப் போச்சு
நொந்தா நொடிச்சாப் போச்சு
பெத்தவன் பிறந்தவன் தவிர
அடுத்தவன் கண்பட்டா
சுத்திப் போட்டே வளர்த்த கூட்டம்.
இண்டைக்கு...
பெண் புரசுகள்
உடுப்பு மாத்தவும்...
குளிக்கவும்...
பால் கொடுக்கவும்...
ஆமிக்காரன் பாக்கத்தான்.
முள் வேலிக்குள்ள இருந்துகொண்டும்
விடியும் எண்ட நினைவோடதான்
அந்த நல்லூர் கந்தனைக் கூப்பிடுறம்.
வருவானோ அவன் !!!
ஹேமா(சுவிஸ்

0 comments