Content feed Comments Feed


மேற்கு வங்க மாநிலத்தில் லால்கர் மாவட்டத்தில் உள்ள சுமார் 30 கிராமங்கள் இன்னமும் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பிடியில் உள்ளது.
அந்த கிராமங்களை மீட்க பாதுகாப்புப் படையினர் லால்கரில் முற்றுகையிட்டுள்ளனர்.

லால்கர் புறநகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் களில் 2 பேர் திடீரென மாயமாகி விட்டனர். அவர்களை கண்டுபிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

புலபேடா காட்டுப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தியபோது பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. பாதுகாப்பு படையினர் தரப்பில் யாரும் காயம் அடையவில்லை என்று மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு எம்.கே. வர்மா கூறினார்.

இந்த துப்பாக்கி சண்டையில் 3 கிராமவாசிகள் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்ததாக தெரிய வந்துள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கு மிட்னாபூர், பன்குரா, புரூலியா ஆகிய 3 மாவட்டங் களிலும் மாவோயிஸ்டுகள் வலுவாக உள்ளனர். 21 காவல் நிலைய பகுதிக்குட் பட்ட இடங்களில் அவர்களது ஆதிக்கம் உடைக்க முடியாத படி உள்ளது.

அவர்களை விரட்ட கடந்த நவம்பர் மாதம் முதல் போலீசாரும் பாதுகாப்புப் படை வீரர்களும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments

Post a Comment

About Us